sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மேதலோடை மக்களுக்கு ஆபத்து

/

மேதலோடை மக்களுக்கு ஆபத்து

மேதலோடை மக்களுக்கு ஆபத்து

மேதலோடை மக்களுக்கு ஆபத்து


ADDED : ஏப் 02, 2025 05:01 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட மேதலோடையில் குடியிருப்புகள் அருகே உள்ள தெற்கு ஊருணியில் தடுப்புச் சுவர் இல்லாததால் குழந்தைகள், மாணவர்களுக்கு ஆபத்து உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஊருணி அருகே கோயில்கள் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட ஏராளமான வீடுகள் அப்பகுதியில் உள்ளன. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளின் முன்பாக திறந்த வெளியில் ஊருணி நீளவாக்கில் 200 மீ., நீளத்திற்கு உள்ளது.

சமீபத்தில் பெய்த மழையால் ஊருணி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அப்பகுதியில் வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் வீட்டின் முன்பு உள்ள ஊருணி அருகே செல்வதற்கு அச்சப்பட்டு குழந்தைகளை வீடுகளிலே பூட்டி வைக்கின்றனர்.

மொத்தி வலசையை சேர்ந்த தன்னார்வலர் ஸ்ரீதமிழ் கூறியதாவது: மேதலோடையில் உள்ள ஊருணி வீடுகளின் முன்பு உள்ளது. ஆழமான இந்த ஊருணியின் முன்பு வீடுகள் உள்ள நிலையில் எவ்வித தடுப்புச் சுவரும் இன்றி திறந்த நிலையில் உள்ளது.

எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாகம் பொது மக்களின் நலன் கருதி பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us