/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கமுதியில் பஸ் கூரையில் ஆபத்தான பயணம்
/
கமுதியில் பஸ் கூரையில் ஆபத்தான பயணம்
ADDED : அக் 12, 2024 07:56 AM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில், போக்குவரத்துவிதிமுறைகளை மீறி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தனியார் பஸ் கூரையில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்துார் வழியாக தேரிருவேலி கிராமத்திற்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது.
அருப்புக்கோட்டையில்இருந்து கமுதி, முதுகுளத்துார் பகுதிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு போதுமான பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தனியார் பஸ்களில் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.
அருப்புக்கோட்டையில் இருந்து தேரிருவேலிக்கு நேற்று முன்தினம் வந்த தனியார் பஸ்சில் பள்ளி -- கல்லுாரி மாணவர்கள், கூரையிலும், படியிலும் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணித்தனர்.இதனால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.