sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இறந்து அழுகிய நிலையில் ஒதுங்கிய கடல் பசு

/

இறந்து அழுகிய நிலையில் ஒதுங்கிய கடல் பசு

இறந்து அழுகிய நிலையில் ஒதுங்கிய கடல் பசு

இறந்து அழுகிய நிலையில் ஒதுங்கிய கடல் பசு


ADDED : ஜூலை 12, 2025 01:28 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் இறந்து அழுகிய நிலையில் கடல் பசு ஒதுங்கியது.

மன்னார் வளைகுடா தீவுகளில் கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் ஆமை உள்ளிட்ட பல வகை அரிய உயிரினங்கள் வாழ்கின்றன. அவை அவ்வப்போது கரை ஒதுங்கும். சமீப நாட்களாக இனப்பெருக்கத்திற்காக வரும் ஆமைகள் மீனவர்கள் வலையில் சிக்குவதும், அவற்றை அவர்கள் மீண்டும் கடலுக்குள் விடுவதும் அடிக்கடி நடக்கிறது.

நேற்று காலை எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் இறந்து அழுகிய நிலையில் 3 அடி நீளமுள்ள 30 கிலோ கடல் பசு ஒதுங்கியது. அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். வனச்சரகர் திவாகர், வனவர் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் சென்று உடல் பரிசோதனைக்கு பின் கடல் பசுவை புதைத்தனர். படகு மோதியோ அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டோ கடல் பசு இறந்திருக்கலாம் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us