ADDED : ஜூன் 12, 2025 11:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை அருகே மாவூர் கண்மாயில் மான்கள்கூட்டமாக வசிக்கின்றன. நேற்று காலையில் அந்தப்பக்கமாக சென்ற சிலர் ஒரு ஆண் மான் இறந்து கிடந்ததை பார்த்து வனத்துறைக்கு தெரிவித்தனர்.
வனத்துறையினர் சென்று கால்நடை டாக்டர்பரிசோதனைக்கு பின் புதைத்தனர். 2 வயதுள்ள அந்த மான் இறப்பு குறித்து விசாரிக்கின்றனர்.