sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில் நிலத்தில் 6000 மரக்கன்றுகள் நட முடிவு

/

கோயில் நிலத்தில் 6000 மரக்கன்றுகள் நட முடிவு

கோயில் நிலத்தில் 6000 மரக்கன்றுகள் நட முடிவு

கோயில் நிலத்தில் 6000 மரக்கன்றுகள் நட முடிவு


ADDED : ஆக 28, 2025 06:07 AM

Google News

ADDED : ஆக 28, 2025 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களில் பனை மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும்படி ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

முதற்கட்டமாக மரக்கன்றுகள் நடுவதற்கான நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்யப்படும் இடம், மரங்கள் வளரக்கூடிய, நீர் வசதி உள்ள இடமாக இருக்க வேண்டும். மரங்களை நட்டு மூன்று ஆண்டுகள் பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கபட்டுள்ளது.

இதன்படி தொண்டியில் உள்ள உந்திபூத்த பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம் தொண்டி கோடிவயல் கண்மாய் பகுதியில் 12 ஏக்கர் இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் 6000 பனைமரக்கன்றுகளை நட முடிவு செய்யபட்டது. அவ்விடத்தில் பட்டாச்சாரியார் கருணாகரன் தலைமையில் மந்திரங்கள் முழங்க பூஜை நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, ராமநாதபுரம் ஹிந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us