நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் எல்.ஐ.சி., அலுவலகம் அருகே அகில இந்திய காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பிரதாப் முன்னிலை வகித்தார். எல்.ஐ.சி., அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை மத்திய அரசும் எல்.ஐ.சி., நிர்வாகமும் நிரப்ப தவறினால் பிப்.,மாதம் வெளி நடப்பு போராட்டம் நடைபெறும் என்றனர். கிளை பொறுப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.