நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -வக்ப் வாரிய திருத்த சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் அரண்மனை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கண் இளங்கோ தலைமை வகித்தார். நகர் தலைவர் வெங்கடேசன், செயலாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் வக்ப் வாரிய திருத்த சட்டத்தினை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.