sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயணியர் நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் மக்கள் சிரமம்

/

பயணியர் நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் மக்கள் சிரமம்

பயணியர் நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் மக்கள் சிரமம்

பயணியர் நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் மக்கள் சிரமம்


ADDED : மே 25, 2025 04:43 AM

Google News

ADDED : மே 25, 2025 04:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி விலக்கு ரோட்டில் சேதமடைந்த பயணியர் நிழற்குடையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

முதுகுளத்துார் --கமுதி ரோடு சித்திரக்குடி விலக்கு ரோட்டில் இருந்து 3 கி.மீ., உள்ளது. இங்கு காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்களும், வேலைக்கு செல்பவர்களும் 3 கி.மீ., நடந்து வந்து விலக்கு ரோட்டில் காத்திருந்து செல்கின்றனர்.

இங்குள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. வெயில், மழைக்காலங்களில் வேறு வழியின்றி மரத்தடியில் காத்திருக்கும் நிலை உள்ளது. பயணியர் நிழற்குடை இருந்தும் பயனில்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.தற்போதைய ஆட்சியில் பஸ்கள் நிற்காத இடங்களில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.

எனவே சித்திரக்குடி அதனை சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைய விலக்கு ரோட்டில் உள்ள நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us