sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உத்தரகோசமங்கை கோயில் முன் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் பாதிப்பு

/

உத்தரகோசமங்கை கோயில் முன் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் பாதிப்பு

உத்தரகோசமங்கை கோயில் முன் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் பாதிப்பு

உத்தரகோசமங்கை கோயில் முன் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் பாதிப்பு


ADDED : மார் 11, 2024 05:14 AM

Google News

ADDED : மார் 11, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ராஜகோபுரம் முன்பாக உள்ள பெரிய வளாகத்தில் ஆக்கிரமிப்பு தரைக் கடைகளால் பக்தர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். பக்தர்களின் காலணிகளை பாதுகாப்பதற்கு தனியாக இடவசதி அமைக்கப்படாததால் ராஜகோபுரம் முன்புறம் உள்ள சுப்பிரமணியர் சன்னதி முன்புறம் ஏராளமான காலணிகளை குவித்து வைக்கின்றனர்.

இதுபோக தேர் நிறுத்துமிடம் முன்பாகவும் காலணிகளை விடுகின்றனர்.

பக்தர்கள் கூறியதாவது: ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் இரு புறங்களிலும் உள்ள பூக்கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு தரை விரிப்பு கடைகளால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் பக்தர்களின் வசதிக்காக ஆலமரத்தின் அருகே காலணி பாதுகாக்கும் இடத்தை அமைத்திடவும், பக்தர்களுக்கு இடையூறு தரும் வகையில் இயங்கும் ஆக்கிரமிப்பு தரை விரிப்பு கடைகளை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us