sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சரணகோஷம் முழங்கிய பக்தர்கள்

/

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சரணகோஷம் முழங்கிய பக்தர்கள்

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சரணகோஷம் முழங்கிய பக்தர்கள்

ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை சரணகோஷம் முழங்கிய பக்தர்கள்


ADDED : டிச 26, 2024 04:42 AM

Google News

ADDED : டிச 26, 2024 04:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: சபரிமலை ஐயப்பன் கோயில் செல்வதற்காக கார்த்திகை 1ல் மாலையணிந்த ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.

சபரிமலையில் வருடாந்திர மண்டல பூஜை யாத்திரை காலம் கடந்த நவ.,16ல் துவங்கியது. இதையொட்டி கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 41 நாட்கள் யாத்திரை காலம் நிறைவாக இன்று சபரிமலையில் மண்டல பூஜை துவங்க உள்ளது. இதை முன்னிட்டு திருப்புல்லாணி அருகே தினைக்குளம் சக்திவேல் முருகன் கோயில் அருகே உள்ள ஹரிஹரசுதன் ஐயப்பன் சன்னதியில் 16ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. தினைக்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பஜனை, நாமாவளி, கூட்டுப் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

தலைமை குருசாமி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள், பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். உற்ஸவர் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் 18 படிகளிலும் கற்பூர ஆரத்தி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹரிஹரசுதன் சபரிமலை யாத்திரை சபா குழுவினர் செய்திருந்தனர்.

* பெரியபட்டினம் அருகே முத்துப்பேட்டையில் சபரி சாஸ்தா சேரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 20ம் ஆண்டு மண்டல ஆராட்டு விழா நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்ஸவமூர்த்தி ஐயப்பன் வீதி உலா நடந்தது. ஒவ்வொரு ஐயப்ப பக்தர்களின் வீடுகள் முன்பாக உற்ஸவர் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு தேங்காய் உடைத்து பழம் நெய்வேத்தியம் செய்யப்பட்டது. 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் நீர் சுமந்தவாறு ஊர்வலமாக வந்தனர்.

ஐயப்பன் கோயில் வளாகத்தில் மூலவருக்கு 16 வகை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

உடலில் வண்ணப் பொடிகளை பூசியவாறு ஆடி வந்தனர். தலைமை குருசாமி மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us