ADDED : பிப் 24, 2024 05:53 AM

அ நிறம் | அளவு
திருவாடானை, : திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி மகம் விழா ஆண்டுதோறும் நடைபெறும்.
இவ்விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பாகம்பிரியாள் பாதயாத்திரை குழு தலைவர் நாகநாதன் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருவெற்றியூர் சென்றனர். வழியில் பக்தர்களுக்கு பொதுமக்கள் நீர், மோர் வழங்கினர்.
