/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விடுமுறை நாளில் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
/
விடுமுறை நாளில் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
விடுமுறை நாளில் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
விடுமுறை நாளில் ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED : டிச 15, 2025 02:40 AM
ராமேஸ்வரம்: விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தந்தனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் இப்பகுதியை ஒருவழி பாதையாக மாற்றியதால், போக்குவரத்து ஓரளவுக்கு சீரானது.

