/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வனத்துறையில் இலவச மரக்கன்றுகள் வழங்கல்
/
வனத்துறையில் இலவச மரக்கன்றுகள் வழங்கல்
ADDED : மார் 14, 2024 03:35 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வனத்துறை சார்பில் வீடுகள், பள்ளி, தொழில் நிறுவனங்களில் வளர்க்க இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் வனச் சரகம்கீழ் பரமக்குடி அருகே கமுதகுடி கிராம் வனத்துறை மத்தியநாற்றங்காலில் மகாகனி, மா, வேங்கை, கொய்யா, புளி, வேம்பு, மாதுளம், சொர்க்கம் ஆகிய மரக்கன்றுகள் உள்ளன.
மக்கள் தங்களது நிலம், பள்ளிக்கூடம், பொது இடம், தொழில் நிறுவனங்கள் போன்ற இடங்களில் நட்டு வளர்ப்பதற்குஇலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை, புகைப்படம்,சிட்டா ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு வனச்சரகர் நாகராஜன் 63839 40433, பாரஸ்டர் கேசவ மூர்த்தி 99769 69370 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

