/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு, பழச்செடிகள் வினியோகம்: வீடுகளில் வளர்க்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை
/
மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு, பழச்செடிகள் வினியோகம்: வீடுகளில் வளர்க்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை
மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு, பழச்செடிகள் வினியோகம்: வீடுகளில் வளர்க்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை
மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு, பழச்செடிகள் வினியோகம்: வீடுகளில் வளர்க்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை
ADDED : ஜூன் 18, 2025 11:37 PM

ராமநாதபுரம்: தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தில் 45 ஆயிரம் காய்கறி விதை தொகுப்புகள், 25 ஆயிரத்து 850 பழச்செடிகளை 75 சதவீதம் அரசு மானியத்தில் வீடுகளுக்கு வழங்க உள்ளனர்.
ாமநாதபுரம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தில் மக்கள் அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகள், பழங்களின் தினசரி தேவை சராசரியாக நபருக்கு 400 கிராம் இருக்க வேண்டும்.
ஊட்டச்சத்து மிகுந்த நஞ்சற்ற இயற்கை விவசாய காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்திடவும், மக்களின் அன்றாட காய்கறித் தேவைகளை நிறைவு செய்யவும் வீட்டுத்தோட்டங்களில் காய்கறி, பழச்செடிகள் வளர்ப்பதை தோட்டக்கலைத்துறை மூலம் ஊக்கப்படுத்தப்படுகிறது. இதன்படி 75 சதவீதம் அரசு மானியத்தில் காய்கறி விதை தொகுப்பு மற்றும் பழச்செடிகள் வழங்க உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஆறுமுகம் கூறுகையில், வீட்டுத் தோட்டங்களில் காய்கறி, பழச்செடிகள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த தக்காளி, கத்திரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை ஆகியவை அடங்கிய 45 ஆயிரம் விதை தொகுப்புகள் 75 சதவீதம் அரசு மானியமாக ரூ.60 வழங்கப்படுகிறது.
எனவே மீதி 25 சதவீதம் ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதே போன்று பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய 3 வகையான பழச்செடிகள் அடங்கிய 25 ஆயிரத்து 850 பழச்செடி தொகுப்புகள் 75 சதவீதம் அரசு மானியத்தில் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை மக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றார்.