ADDED : ஜன 10, 2026 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சிபுளி: ராமநாதபுரம் அருகே பெருங்குளம் அல்-கலம் பள்ளியில் மாவட்ட அளவிலான அபாகஸ் போட்டி நடந்தது.
அல்-கலம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் சேக் அப்துல் குத்துாஸ் அஸ்ஹாரி போட்டியைத் துவக்கி வைத்தார்.
அல்-கலம் பள்ளி முதல்வர் அப்துல் ரஷித் வரவேற்றார். சிறந்த பள்ளிகளுக்குக் கேடயங்கள் வழங்கப்பட்டது.
பள்ளி தாளாளர் அப்துல் ரகுமான், ஆலோசகர் காதர் இப்ராஹிம், ராமநாதபுரம் ஏ- மாஸ் நிறுவனர் உமர் சரிப் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஆசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.

