/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பறவைகள் பலவிதம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.27, 28 ல் கணக்கெடுப்பு
/
பறவைகள் பலவிதம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.27, 28 ல் கணக்கெடுப்பு
பறவைகள் பலவிதம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.27, 28 ல் கணக்கெடுப்பு
பறவைகள் பலவிதம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.27, 28 ல் கணக்கெடுப்பு
ADDED : ஜன 25, 2024 05:03 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் இவ்வாண்டு சரணாலயங்கள் மட்டுமின்றி பறவைகளின் வருகையை துள்ளியமாக கணக்கிடும் வகையில் 20 இடங்களில் ஜன.27, 28 ஆகிய இரு நாட்களில் 50 பேர் அடங்கிய குழுவினர் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்.
மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரகோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.
குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக அக்.,ல் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம் பெயர்கின்றன.
இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் மழை பெய்து சரணாலயத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் தேர்த்தங்கல் பகுதிக்கு பறவைகள் வருகை அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் சரணாலயங்கள் மட்டுமின்றி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு 20 இடங்களில் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் வனச்சரகர் திவ்யலட்சுமி கூறுகையில், தமிழகத்தில் அனைத்து வனப்பகுதிகளிலும் ஜன.27, 28 பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
இதன்படி சரணாலயங்கள், சிங்கிலி தீவு, மனோலி தீவு, தனுஷ்கோடி, களிமண்குண்டு, கடுகுச்சந்தை, வாலிநோக்கம், உப்பூர், அரியாங்குண்டு, புதுமடம் உள்ளிட்ட 20 இடங்களில் பறவைகள் ஆர்வலர்கள், கல்லுாரி மாணவர்கள் என 50க்கு மேற்பட்டோர் தனித்தனி குழுவாக பிரிந்து கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாணவர்களுக்கு ஆன்-லைனில் பறவைகள் கணக்கெடுப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார்.--