sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தி.மு.க., கவுன்சிலர் மகன் கஞ்சா வழக்கில் சிக்கினார்

/

தி.மு.க., கவுன்சிலர் மகன் கஞ்சா வழக்கில் சிக்கினார்

தி.மு.க., கவுன்சிலர் மகன் கஞ்சா வழக்கில் சிக்கினார்

தி.மு.க., கவுன்சிலர் மகன் கஞ்சா வழக்கில் சிக்கினார்


ADDED : பிப் 05, 2025 02:26 AM

Google News

ADDED : பிப் 05, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த தி.மு.க., கவுன்சிலர் மகன் உள்ளிட்ட, ஆறு பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில், போலீசார் ரோந்து சென்றபோது அங்கு பதுக்கி வைத்திருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த முனீஸ்வரன், 30, ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சத்தியமூர்த்தி மகன் நிதீஷ்குமார், 22, உட்பட ஆறு வாலிபர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.

இதில், சொந்த பயன்பாட்டிற்காக நிதீஷ்குமார் கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததாக போலீசார் கூறினர். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதால், மேல்விசாரணை நடக்கிறது.

இதற்கிடையே, பாம்பன் ரயில்வே ஸ்டேஷன் அருகே விற்பனைக்காக டூ - வீலரில் பதுக்கி வைத்திருந்த, 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாம்பனை சேர்ந்த முத்தையா ரோஷன், 26, திவாஸ்கர், 23, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us