sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தி.மு.க., கம்பத்தால் விபரீதம் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

/

தி.மு.க., கம்பத்தால் விபரீதம் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

தி.மு.க., கம்பத்தால் விபரீதம் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி

தி.மு.க., கம்பத்தால் விபரீதம் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலி


ADDED : நவ 15, 2024 02:30 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் இந்திரா நகரில் பாலா என்பவரது மீன் கம்பெனி லாரியில் கோபி, 31, என்பவர் டிரைவராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி 5 மாதங்கள்தான் ஆகிறது.

நேற்று இரவு மீன் கம்பெனியில் லாரியை நிறுத்துவதற்காக, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து லாரியை பின்னோக்கி நகர்த்தி சென்றார்.

அப்போது ரோட்டோரத்தில் லேசாக ஊன்றி இருந்த தி.மு.க., கொடிக்கம்பத்தில் கட்டியிருந்த இரும்பு கம்பி மீது லாரி டிரைவரின் கதவு மோதியது.

இதில் கொடிக் கம்பி அறுந்து, அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. அந்த இரும்புக் கம்பி வழியாக லாரி டிரைவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us