sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரத்தில் தடை செய்த இரட்டை மடியில் மீன்பிடிப்பு

/

ராமேஸ்வரத்தில் தடை செய்த இரட்டை மடியில் மீன்பிடிப்பு

ராமேஸ்வரத்தில் தடை செய்த இரட்டை மடியில் மீன்பிடிப்பு

ராமேஸ்வரத்தில் தடை செய்த இரட்டை மடியில் மீன்பிடிப்பு


ADDED : ஜூலை 03, 2025 09:55 PM

Google News

ADDED : ஜூலை 03, 2025 09:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கடலில் தடை செய்த இரட்டைமடியில் மீன்பிடித்த விசைப்படகின் வலை, மீன்களை இந்திய கடற்படை, மீன்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கடல் வளம், மீன் வளத்தை அழிக்கக்கூடிய இரட்டை மடியில் மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் ஒரு சிலர் இரட்டை மடியில் (இரு படகில் ஒரு வலையில் மீன்பிடிப்பது ) மீன் பிடிப்பதாக மீன்துறைக்கு தகவல் வந்தது.

இதையடுத்து நேற்று மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய மீனவர்களின் படகை ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன், இந்திய கடற்படை வீரர்கள்இணைந்து கண்காணித்தனர். அப்போது ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சகாயஅந்தோணி ரெனி என்பவரது படகில் இரட்டை மடி இருந்தது.

உடனே வலையையும், மீனையும் பறிமுதல் செய்து படகு உரிமையாளர் மீது வழக்கு பதிந்தனர். இப்படகிற்கு ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்க கூடும் எனவும், பறிமுதல் செய்த மீனை ரூ.7000த்திற்கு விற்றதாக மீன்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us