ADDED : செப் 28, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 10:30 முதல் 11:30 வரை ஒரு மணி நேரத்திற்கு மிகாமல் மழை பெய்தது.
சிக்கல் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்து நெல் விதைப்பு செய்திருந்தனர். நேற்று பெய்த மழையால் வயலில் ஈரப்பதம் ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அவர்கள் கூறியதாவது :
இது போன்ற மழை பெய்வது மண்ணுக்கு ஈரப்பதத்தை கொடுக்கும். அடிக்கடி மழையை எதிர்பார்க்கிறோம் என்றனர். நேற்று பல இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.