sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்

/

திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்

திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்

திரவுபதி அம்மன் கோயிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன்


ADDED : ஆக 17, 2025 12:13 AM

Google News

ADDED : ஆக 17, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவு பதி அம்மன் கோயில் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

ஆர்.எஸ்.மங்கலம் திரவு பதி அம்மன் கோயில் விழா ஜூலை 25 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் பல்வேறு கிராமத்தார்களின் மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திருக்கல்யாணம், சக்ராபர்ண கோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தவசு கடப்பலி, படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

விழாவின் தொடர்ச்சியாக முக்கிய விழாவான பூக்குழி விழா நேற்று அதிகாலை 5:30 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் அரசூரணி குளத்தில் புனித நீராடி அங்கிருந்து ஊர்வலமாக சென்று கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

தொடர்ந்து மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த னர். விழா ஏற்பாடுகளை நிர்வாகக் குழு மற்றும் ஹிந்து பேரவை நிர் வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us