sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பள்ளியில் பயன்பாடு இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு நிதி வீணடிப்பு

/

பள்ளியில் பயன்பாடு இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு நிதி வீணடிப்பு

பள்ளியில் பயன்பாடு இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு நிதி வீணடிப்பு

பள்ளியில் பயன்பாடு இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு நிதி வீணடிப்பு


ADDED : பிப் 13, 2024 04:04 AM

Google News

ADDED : பிப் 13, 2024 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே வளநாடு அரசு உயர் நிலைப்பள்ளியில்​குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் காட்சி பொருளாக உள்ளது. அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் வளநாடு, செங்கப்படை, தெய்வதானம், இந்திரா நகர், சேமனுார்,செபஸ்தியர்புரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் கடந்த 2018--19ம் நிதி ஆண்டில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது.

அப்போது முதல் பயன்பாடின்றி கிடக்கிறது. இந்நிலையில் கடந்த 2022--23ம் ஆண்டில் ரூ.3.5 லட்சம் செலவில் மேலும் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது வரை இரண்டும் பயன்பாடின்றி உள்ளன. இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுகிறது.

எனவே மீண்டும் சுத்திகரிப்பு இயந்திரங்களை பயன்பாட்டிற்காக கொண்டுவர வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us