/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
400 ஜெலட்டின் பறிமுதல் வழக்கில் டிரைவர் கைது
/
400 ஜெலட்டின் பறிமுதல் வழக்கில் டிரைவர் கைது
ADDED : ஜன 28, 2025 05:14 AM

திருவாடானை: கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பதற்காக 400 ஜெலட்டின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த டிரைவர் கைது செய்யப்பட்டார்.   புதுக்கோட்டை மாவட்டம் மலைப்பகுதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதிக்கு ஜெலட்டின் கடத்தி வரப்படுவது வழக்கமாக உள்ளது. 2024 ஆக.28 இரவு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து டூவீலரில் இரண்டு பேர் ஒரு சாக்கு மூடையில் ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் ஒயரை, ஓரியூரை நோக்கி கடத்தி சென்ற போது எஸ்.பி.பட்டினம் போலீசார் 400 ஜெலட்டின், 400 டெட்டனேட்டர், 2 கிலோ வயரை கைப்பற்றினர்.
ஏற்கனவே இந்த வழக்கில் தொண்டி புதுக்குடியை சேர்ந்த செந்தில்குமார் 35, உட்பட ஆறு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். ஜெலட்டின் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த ஆனந்தன் 44, என்பவரை இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் கைது செய்தார்.

