/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காரில் இருந்து விழுந்து இளைஞர் பலியான வழக்கில் டிரைவர் கைது
/
காரில் இருந்து விழுந்து இளைஞர் பலியான வழக்கில் டிரைவர் கைது
காரில் இருந்து விழுந்து இளைஞர் பலியான வழக்கில் டிரைவர் கைது
காரில் இருந்து விழுந்து இளைஞர் பலியான வழக்கில் டிரைவர் கைது
ADDED : அக் 29, 2024 04:59 AM

ராமநாதபுரம்: மருதுபாண்டியர் குரு பூஜைக்கு காரில் சென்ற போது தவறி விழுந்து இளைஞர் பலியான வழக்கில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் 22. இவர் காளையார்கோவிலில் நடந்த மருதுபாண்டியர்கள் குரு பூஜை விழாவில் பங்கேற்க காரில் சென்றார்.
அப்போது ராமநாதபுரம் மாடக்கொட்டான் கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது காரில் இருந்த விக்னேஷ் தவறி ரோடடில் விழுந்தார்.
இது தெரியாமல் காரை ஓட்டிச் சென்றனர். அக்கம் பக்கத்தினர் விக்னேஷ்சை ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கேணிக்கரை போலீசார் விசாரித்தனர். கார் டிரைவர் ராமேஸ்வரம் ஆத்திக்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பவுன்ராஜ் 26, என்பவரை கைது செய்தனர்.

