ADDED : மார் 15, 2026 04:44 AM
அ நிறம் | அளவு
தேவிபட்டினம்: தேவிபட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான சம்பை, திருப்பாலைக்குடி, சிங்கனேந்தல், நாரணமங்கலம் உட்பட சுற்றுப்புற பகுதி குளக்கரை, ரோட்டோரங்களில் அதிகளவில் புளிய மரங்கள் உள்ளன.
இந்நிலையில், புளிய மரங்கள் தற்போது மகசூல் நிலையை அடைந்து புளியம் பழங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.
கடந்தாண்டில் கூடுதல் மகசூல் கிடைத்த மரங்களில் நடப்பாண்டில் மகசூல் குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். சில மாதங்களாக பருவமழையின்றி தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியால் தான் புளி மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
