ADDED : மார் 27, 2025 07:16 AM
ராமநாதபுரம்: ராமநாதபுர மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதை ஒழிப்பு ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராஜு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் காஜா முகைதீன் வரவேற்றார். மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் போதை ஒழிப்பு மன்றத்தின் செயல்பாட்டு முகவுரையை வாசித்தார்.
மாவட்ட மனநல திட்ட அலுவலர் டாக்டர் சஞ்சய் பாண்டியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ.,சுபாஷ் சீனிவாசன், மனநல டாக்டர் அசோக், கேணிக்கரை எஸ்.ஐ.,ஐ., சாலமன் அப்பாத்துரை ஆகியோர் போதையால் ஏற்படும் குடும்ப, சமூகக் கேடுகள் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், போதைப்பொருட்களால் ஏற்படும் விளைவுகள் குறித்த பேசினர்.
முகாமில் போதை ஒழிப்புக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதை ஒழிப்பு மன்றம் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளிகளின் துணை ஆய்வாளர் ஆனந்த் நன்றி கூறினார்.