sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

/

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது


ADDED : மார் 27, 2025 02:07 AM

Google News

ADDED : மார் 27, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.

பாம்பனில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்த இருப்பதாக திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை பாம்பன் குந்துகால் கடற்கரையில் அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 2 கிலோ ஐஸ் எனும் போதைப் பொருள் இருந்தது. பின்னர் கைதான இருவரும் பாம்பன், அக்காள்மடம் பகுதியை சேர்ந்த ஜீவா 30, ஜென்சி 24, என தெரிந்தது.

இவர்கள், இந்த போதை பொருளை கள்ளத்தனமாக நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1 கோடி. போதைப் பொருளையும், கைதான இருவரையும் மேல்விசாரணைக்காக காரில் திருச்சி கொண்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us