/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவர் குருபூஜை விழாவிற்கு திறந்தவெளி வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை டி.எஸ்.பி., எச்சரிக்கை
/
தேவர் குருபூஜை விழாவிற்கு திறந்தவெளி வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை டி.எஸ்.பி., எச்சரிக்கை
தேவர் குருபூஜை விழாவிற்கு திறந்தவெளி வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை டி.எஸ்.பி., எச்சரிக்கை
தேவர் குருபூஜை விழாவிற்கு திறந்தவெளி வாகனங்களில் வருவதற்கு அனுமதியில்லை டி.எஸ்.பி., எச்சரிக்கை
ADDED : அக் 25, 2025 03:54 AM

முதுகுளத்துார்: -கமுதி பசும்பொன் தேவர் குருபூஜை முன்னிட்டு வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை என டி.எஸ்.பி., சண்முகம் தெரிவித்தார்.
முதுகுளத்துார் சப் டிவிஷன் உட்பட்ட கிராம தலைவர்களுடன் போலீசார் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சாகுல் ஹமீது, சக்தி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டி.எஸ்.பி., சண்முகம் பேசியதாவது, பசும்பொன் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா அக்., 28,29,30ம் வரை நடைபெறுகிறது.
வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. டூவீலரில் செல்வதற்கும் அனுமதி இல்லை. சொந்த வாகனங்களில் வருபவர்கள் டி.எஸ்.பி., அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று போலீசார் கூறும் வழித்தடங்கள் மட்டும் செல்ல வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முறையான அனுமதி பெற்று வர வேண்டும். பஸ் கூரையில் பயணம் செய்யக்கூடாது.ஒலி பெருக்கி கட்டக்கூடாது.
கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டுமென்றால் போலீசிடம் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். போலீசாருக்கு கிராமமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். கிராமதலைவர்கள், மக்கள் பங்கேற்றனர்.

