sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ.37,000 லஞ்சம் வாங்கிய இ-சேவை பொறுப்பாளர் கைது

/

ரூ.37,000 லஞ்சம் வாங்கிய இ-சேவை பொறுப்பாளர் கைது

ரூ.37,000 லஞ்சம் வாங்கிய இ-சேவை பொறுப்பாளர் கைது

ரூ.37,000 லஞ்சம் வாங்கிய இ-சேவை பொறுப்பாளர் கைது


ADDED : பிப் 09, 2025 01:11 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, குமிழேந்தல் பகுதியைச் சேர்ந்த விவசாயி, தன் தந்தை பெயரில் உள்ள நிலத்திற்கான பட்டா மாறுதல் கேட்டு பகவதிமங்கலம் வி.ஏ.ஓ., பார்த்திபன், 28, என்பவரை அணுகினார். அவர், 50,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் விவசாயி புகார் செய்தார். அவர்கள் அறிவுரையின்படி, 37,000 ரூபாயை விவசாயி கொண்டு சென்றபோது, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள இ-சேவை மையத்தில் கொடுக்குமாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

பணத்தை கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் இ - சேவை மைய பொறுப்பாளர் அகமது ஜாப்ரின் அலி, 25, என்பவரை கைது செய்தனர். இதையறிந்த பார்த்திபன், மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து தப்பினார்.

தொடர்ந்து, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். பார்த்திபனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us