/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேசிய பசுமைப்படை பள்ளி மாணவர்களுக்கு சூழல் முகாம்
/
தேசிய பசுமைப்படை பள்ளி மாணவர்களுக்கு சூழல் முகாம்
ADDED : ஜன 22, 2024 04:47 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் தேசிய பசுமைப்படை பள்ளி மாணவர்கள்தேர்வு செய்யப்பட்டு சூழல் முகாம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமைப்படை அமைப்பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர் பெர்னார்டிட் தலைமையில் சூழல் முகாம் நடந்தது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் மத்திய சுற்றுச்சூழல் வனம் காலநிலைமாற்றத்துறை அமைச்சகம் உதவியுடன் சுற்றுச்சூழல்கல்வித்திட்டம் சார்பில் தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சூழல் முகாமை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார்.
தமிழக பறவைகள்சரணாலயத்தில் 5 சரணாலயங்கள் ராமநாதபுரத்தில்உள்ளதாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு 25க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள்மாணவர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டன. சிறப்பு இயல்புகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
மத்திய கடல்மீன் வள ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் கடல் சூழல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பற்றிய காட்சிகளை பார்வையிட்டு அதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
சுந்தரமுடையானில் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் மரக்கன்றுகள், நாற்றங்கால் அமைக்கும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம் நடத்தப்பட்டது.
வாங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு அழைத்துசெல்லப்பட்டு அதன் வேறுபாடுகள், உயிர்ச்சூழல்கள் குறித்து விவாதம் செய்யப்பட்டது.
முகமது சதக் ஆசிரியர்பயிற்சிக்கல்லுாரி முதல்வர் சோமசுந்தரம், முகமது சதக் மெட்ரிக் பள்ளி முதல்வர் சேகர் பேசினார்.பரமக்குடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.