/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் வயதான தம்பதி தற்கொலை : * 3 நாளுக்கு பின் உடல் மீட்பு
/
பரமக்குடியில் வயதான தம்பதி தற்கொலை : * 3 நாளுக்கு பின் உடல் மீட்பு
பரமக்குடியில் வயதான தம்பதி தற்கொலை : * 3 நாளுக்கு பின் உடல் மீட்பு
பரமக்குடியில் வயதான தம்பதி தற்கொலை : * 3 நாளுக்கு பின் உடல் மீட்பு
ADDED : மே 02, 2025 01:53 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வயதான தம்பதி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மூன்று நாள்களுக்குப் பிறகு நேற்று மாலை அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன.
பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன் 75. பரமக்குடி கூட்டுறவு பால் பண்ணையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தனலட்சுமி 70. இருவரும் ஏப்.,27ல் மகள் புனிதாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அதன் பிறகு மூன்று நாட்களாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் மகள் புனிதா நேற்று மாலை 4:00 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தார்.
வீட்டின் கதவு வழியாக ரத்தம் வடிந்திருந்தது. பிறகு போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் கிடந்தது. அப்பகுதி மக்கள் இந்த தம்பதியினரை மூன்று நாட்களாக பார்க்கவில்லை என தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் தடயவியில் போலீசார் ஆய்வு செய்தனர். போலீசார் மருந்து குடித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இருப்பினும் வேறு எதுவும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.