ADDED : ஜூலை 22, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருங்குடியை சேர்ந்தவர் நாகரத்தினம் 60, உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தவர் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டிலிருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.
உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு நாகரத்தினம் பலியானார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.