sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

உத்தரகோசமங்கையில் புதிய சந்தன காப்பில் மரகத நடராஜர்

/

உத்தரகோசமங்கையில் புதிய சந்தன காப்பில் மரகத நடராஜர்

உத்தரகோசமங்கையில் புதிய சந்தன காப்பில் மரகத நடராஜர்

உத்தரகோசமங்கையில் புதிய சந்தன காப்பில் மரகத நடராஜர்


UPDATED : ஏப் 06, 2025 02:17 AM

ADDED : ஏப் 06, 2025 02:15 AM

Google News

UPDATED : ஏப் 06, 2025 02:17 AM ADDED : ஏப் 06, 2025 02:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை,:-ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் காலை கும்பாபிஷேகம் நடந்த நிலையில் பச்சை மரகத நடராஜருக்கு புதிய சந்தனக்காப்பிடப்பட்டு நடை அடைக்கப்பட்டது.

உத்தரகோசமங்கையில் உள்ள அபூர்வ பச்சை மரகத நடராஜரை கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அரிய நிகழ்வாக மூன்று நாட்கள் சந்தனம் களையப்பட்ட நிலையில் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி ஏப்.,2 முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனாதி தைலம் பூசப்பட்டு காட்சி தந்தார்.

பொதுவாக மார்கழியில் ஆருத்ரா தரிசனத்திற்கு மட்டுமே ஆண்டிற்கு ஒரு முறை சந்தனம் படி களைதல் நடக்கும்.

தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜரை பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் கும்பாபிஷேகம் நிறைவை முன்னிட்டு நேற்று முன்தினம் மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 32 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டு 50 கிலோ புதிய சந்தனம் சாற்றப்பட்டு இரவு 11:30 மணிக்கு சன்னதி பூட்டப்பட்டது. வரும் நாட்களில் பக்தர்கள் கம்பி கதவுகளின் துவாரத்தின் வழியாக திருமேனியில் சந்தனம் காப்பிடப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்யலாம்.






      Dinamalar
      Follow us