/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோட்டக்கரை ஆற்றை சீரமைக்க வலியுறுத்தல்
/
கோட்டக்கரை ஆற்றை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 04, 2025 03:42 AM
ஆர்.எஸ்.மங்கலம்: கோட்டக்கரை ஆற்றில் புதர்களை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்வலியுறுத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் உற்பத்தியாகும் சருகனி ஆறு மற்றும் சிவகங்கை மாவட்டகிராமங்களில் இருந்து வெளிவரும் உபரி நீர் ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்துார், ஆய்ங்குடி, கொக்கூருணி, சனவேலி, அழியாதான்மொழி வழியாக கோட்டைக்கரை ஆற்றில் உபரிநீர்சென்று கிழக்கு கடற்கரை சாலை சேந்தனேந்தல் ஓடை வழியாக கடலில் கலக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த கோட்டக்கரை ஆற்றில் பெருமழை காலங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் தேங்கும் தண்ணீர் விரைவாக வெளியேறும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கோட்டைக்கரையாறு முறையாக பராமரிக்கப்படாமல் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர் மண்டியுள்ளது.
இதனால் ஆற்றில் தண்ணீர் விரைவாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சில மாதங்களாக பெய்த கனமழையால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியதுடன், தற்போது பெரும்பாலான கண்மாய்களிலிருந்துமாறுகால் பாய்கிறது.
அதே நேரம் முறையான வாறுகால் மற்றும் சீரமைப்பு இல்லாததால் தற்போது விவசாயநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கோட்டைக்கரை ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்வலியுறுத்தினர்.

