
ராமநாதபுரம் : ராமநாதபுரம் எல்.ஐ.சி., கிளை அலுவலகத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
முதன்மை கிளை மேலாளர் லட்சுமணன் தலைமை வகித்தார். வளர்ச்சி அதிகாரி செந்தில்குமார், காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளை தலைவர் முத்துப்பாண்டி, அலுவலர்கள், முகவர்கள் பங்கேற்றனர்.
*ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு அறிஞர் அண்ணாதுரை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா நடந்தது.தலைமையாசிரியர் ஜெயந்தி தலைமை வகித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், கோலப்போட்டி நடந்தது. ஆசிரியர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
*கீழக்கரை முகம்மதுசதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் புது மாயாகுளம், வேளானுார் பொதுமக்கள் இணைந்து நடத்தியசமத்துவ பொங்கல் விழா நடந்தது.
பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் ேஷக்தாவூத் தலைமை வகித்தார். மெக்கானிக்கல் துறை தலைவர்கணேஷ்குமார் முன்னிலை வகித்தார். மரைன் துறை தலைவர் சுதேவ் வரவேற்றார். பொங்கலோ பொங்கல் என கோஷம் முழங்கினர்.
வேளானுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர் ராஜேஷ் கண்ணா, என்.சி.சி., அலுவலர் மருதாச்சலமூர்த்தி, நேவல் அலுவலர் வினோத், வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.