நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்ற கூட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் நடந்தது. மாநில பொருளாளர் ஆலம்பாடி பாஸ்கரன் தலைமை வகித்தார். இசைக்கலை உறுப்பினர்கள் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக கருங்குயில் ஜேம்ஸ், துணைத் தலைவராக கருப்பையா, கவுரவ தலைவராக ஜெய்சங்கர், செயலாளராக வலிமீக நாதன், பொருளாளராக கலையரசன், செய்தி தொடர்பாளராக பிரனேஷ் கண்ணன், மகளிர் அணி தலைவராக ராணி, செயலாளராக நதுனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.