/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில்களில் அறங்காவலர் நியமிக்க எதிர்பார்ப்பு
/
கோயில்களில் அறங்காவலர் நியமிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 20, 2025 11:03 PM
திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் பெரும்பாலான கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கபடாததால் வளர்ச்சி பணிகள் பாதிக்கபட்டுள்ளது.
திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 128 கோயில்கள் உள்ளன. இந்த 128 கோயில்களில் 40 கோயில்களுக்கு மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கபட்டனர்.
மற்ற கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கவில்லை. எப்போது நியமிக்கபடுவார்கள் என விண்ணப்பதாரர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அறங்காவலர்கள் நியமிக்கபட்டால் மட்டுமே வளர்ச்சி பணிகள் நடைபெறும். எனவே அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.