/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு தனி அடையாள எண் ஏப்.15 வரை நீட்டிப்பு
/
விவசாயிகளுக்கு தனி அடையாள எண் ஏப்.15 வரை நீட்டிப்பு
விவசாயிகளுக்கு தனி அடையாள எண் ஏப்.15 வரை நீட்டிப்பு
விவசாயிகளுக்கு தனி அடையாள எண் ஏப்.15 வரை நீட்டிப்பு
ADDED : ஏப் 02, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : ஆதார் எண் போல் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. திருவாடானை தாலுகாவில் இதற்கான பணிகள் பிப்.10 முதல் துவங்கியது. அனைத்து ஊராட்சி அலுவலகம், இ-சேவை மையம் மற்றும் வேளாண் அலுவலகத்தில் இப்பணிகள் நடக்கிறது.
தாலுகாவில் மொத்தமுள்ள 23 ஆயிரம் விவசாயிகளில் இதுவரை பத்தாயிரம் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் நலன் கருதி ஏப்.,15 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் தங்கியிருக்கும் விவசாயிகள் அங்குள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்றனர்.

