ADDED : பிப் 20, 2026 07:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் டாடா கேபிடல் லிமிடெட், ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் இணைந்து கண் பரிசோதனை முகாம் நடந்தது. தலைமை மருத்துவ அதிகாரி சுதா தலைமை வகித்தார். முகாமில் கம்ப்யூட்டர் கண் பரிசோதனை, கண்ணாடி பரிசோதனை, கண்புரை நோய் கண்டறிதல், கண்ணில் தசை வளர்வதை கண்டறிதல், குறைந்த பார்வை, நீரிழிவு, கண் பாதிப்பு உள்ளிட்ட சிறப்பு பரிசோதனைகளை டாக்டர்கள் செய்தனர்.
மேல்சிகிச்சைக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். முதுகுளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து இலவசமாக ஆயிரம் பேருக்கு அறுவை சிகிச்சை, 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர். உடன் சங்கரா கண் மருத்துவமனை பணியாளர்கள் பலர் இருந்தனர்.

