ADDED : பிப் 22, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் 39. விவசாயி. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஓரியூரிலிருந்து பாண்டுகுடி சாலையில் டூவீலரில் சென்றார்.
ஆக்களூர் விலக்கு ரோட்டில் நின்றிருந்த டிராக்டரின் பின்னால் கட்டுப்பாட்டை இழந்து டூவீலரில் மோதியதில்பாண்டியன் அதே இடத்தில் இறந்தார்.
சிவப்பு எச்சரிக்கை விளக்கு எரியாமல், பாதுகாப்பு இல்லாமல்டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்ததால் டிராக்டர் டிரைவரை தொண்டி போலீசார் தேடி வருகின்றனர்.