/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நவ.15க்குள் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை
/
நவ.15க்குள் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : நவ 11, 2025 03:28 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்க நவ.,15க்குள் விவசாயிகள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் தினேஷ்வரி கூறியதாவது: விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டுவருகிறது.
வரும் காலங்களில், மத்திய, மாநில அரசின் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்துவகை மானியங்களும், இந்த அடையாள எண் அடிப்படையிலேயே வழங்கப்படும். பி.எம்., கிஷான் திட்டத்தில் தொகை பெறுவதற்கும் இந்த அடையாள எண் பெறுவது அவசியமாகிறது.
திருவாடானை தாலுகாவில் அடையாள எண் வழங்குவதற்காக, விவசாயிகளிடமிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை அடையாள எண் பெறாத விவசாயிகள், தங்கள் ஆதார், நில ஆவண நகல், ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகியவற்றுடன் பொது சேவை மையம் அல்லது வேளாண்மை உழவர் நலத்துறை வாயிலாக நடைபெறும் முகாம்களில் பங்கேற்று பதிவு செய்துகொள்ளவேண்டும்.
நவ. 15ம் தேதி இப் பதிவுக்கான கடைசி நாள் என்றார்.

