/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய் வரத்து கால்வாய்கள் துார்வாராததால் விவசாயிகள் சிரமம்
/
கண்மாய் வரத்து கால்வாய்கள் துார்வாராததால் விவசாயிகள் சிரமம்
கண்மாய் வரத்து கால்வாய்கள் துார்வாராததால் விவசாயிகள் சிரமம்
கண்மாய் வரத்து கால்வாய்கள் துார்வாராததால் விவசாயிகள் சிரமம்
ADDED : நவ 04, 2025 03:59 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே உலையூர் கண்மாயில் மடைகள், நீர் வரத்து கால்வாய்கள் துார்ந்து போனதால் நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் சிரமப் படுகின்றனர்.
உலையூர் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக் கின்றனர். இங்குள்ள கண்மாயில் பல ஆண்டு களுக்கு முன்பு தாவுமடை வரத்து கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் விவசாயத்திற்கு நீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தனர்.
காலப்போக்கில் மடை, வரத்து கால்வாய்கள் மராமத்து பணி செய்யாததால் துார்ந்து போனது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாமல் விவ சாயிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
உலையூர் கிராமத்தில் கண்மாய் நீரைப் பாய்ச்சி விவசாயம் செய்கின்றனர். இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்கின்றனர்.
கடந்த பல ஆண்டு களாகவே மடை, வரத்து கால்வாய் முறையாக துார்வாரப்படவில்லை. இதனால் கால்வாய் இருந்த இடம் தெரியாமல் அழிந்துள்ளது. விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக கூடுதல் பணம் செலவு செய்து மோட்டார் வைத்து கண்மாயில் தேங்கும் தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர். கால்வாயை துார்வார விவசாயிகள் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கண்மாயில் தேங்கும் தண்ணீரும் வீணாகி வருகிறது.
எனவே உலையூர் கண்மாய் மடை, வரத்து கால்வாய்களை துார்வாரி விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்வதற்கு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

