
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: -திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் சார்பில் உழவர் தின விழா கொண்டாடப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது தலைமை வைத்தார். மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் உமர் முன்னிலை வகித்தார்.
பொங்கல் வைத்தும், உழவர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல், விவசாயிகள் பங்கேற்றனர்.