sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயிர்காப்பீடு நீட்டிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

/

பயிர்காப்பீடு நீட்டிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

பயிர்காப்பீடு நீட்டிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

பயிர்காப்பீடு நீட்டிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : நவ 19, 2024 05:10 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: பயிர் காப்பீடு தேதி நீட்டிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய காப்பீடு தொகை வழங்க வேளாண் காப்பீட்டு நிறுவனம் சார்பில் காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.

காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஏராளமான விவசாயிகள் பல்வேறு காரணங்களால் காப்பீடு செய்ய முடியாமல் தவித்தனர். விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது: நிலங்களில் களை எடுப்பு, உரமிடுதல் போன்ற பணிகள் நடக்கிறது. தீபாவளிக்கு தொடர் விடுமுறை என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் காப்பீடு செய்ய முடியவில்லை. ஆகவே நவ.30 வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் நவ.11 ல் வெளியானது. இதன் எதிரொலியாக நவ.30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us