sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முதுகுளத்துார் பகுதிகளில் செயற்கையான உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமம்

/

முதுகுளத்துார் பகுதிகளில் செயற்கையான உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமம்

முதுகுளத்துார் பகுதிகளில் செயற்கையான உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமம்

முதுகுளத்துார் பகுதிகளில் செயற்கையான உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமம்


ADDED : நவ 04, 2025 10:19 PM

Google News

ADDED : நவ 04, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட தேரிருவேலி, காக்கூர், பூக்குளம், இளஞ்செம்பூர், நல்லுார், கீழத்துாவல், சாம்பக்குளம், அப்பனேந்தல் உட்பட பல்வேறு கிராமங்களில் நெல் விதைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வப்போது பெய்த மழையால் பயிர்கள் நன்கு முளைக்கத் துவங்கியது. தற்போது விவசாயிகள் களை எடுத்தல், உரம் இடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பா.ஜ., கிழக்கு ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் கூறியதாவது:

முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட தேரிருவேலி அதனை சுற்றியுள்ள சடையனேரி, கருமல், காக்கூர், பெரியஇலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல், மிளகாய், பருத்தி விவசாயம் செய்கின்றனர். விவசாயத்திற்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு இல்லாமல் விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர்.

முதுகுளத்துார், தேரிருவேலி போன்ற இடங்களில் தனியார் கடைகளில் உரம் விற்பனை செய்கின்றனர். தனியார் கடையில் உரம் வாங்கச் சென்றால் அவர்கள் லாப நோக்கத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதோடு காம்ப்ளக்ஸ் உரம் சேர்த்து வாங்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இதனால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

மத்திய அரசு குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கும் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளை வேண்டுமென்றே செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விவசாயிகளை சிரமப்படுத்துகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us