sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கால்நடை காப்பீடு திட்டம் ஆர்வம் இல்லாத விவசாயிகள்

/

கால்நடை காப்பீடு திட்டம் ஆர்வம் இல்லாத விவசாயிகள்

கால்நடை காப்பீடு திட்டம் ஆர்வம் இல்லாத விவசாயிகள்

கால்நடை காப்பீடு திட்டம் ஆர்வம் இல்லாத விவசாயிகள்


ADDED : ஏப் 27, 2025 06:44 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: கால்நடைகளுக்கான காப்பீட்டு திட்டத்திற்கு ஏப்.24 க்குள் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டும் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஒருவர் கூட பதிவு செய்யவில்லை.

கால்நடைகளுக்கு வானிலை அடிப்படையிலான காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், மாடுகள் மற்றும் எருமைகளுக்கு வானிலை காப்பீட்டு திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது.

கோடை காலத்தில் வெப்ப நிலை உயரும் போது கால்நடைகள் பாதிக்கப்படும். இது கால்நடை விவசாயிகளுக்கு குறிப்பாக கோடைகால வெயில் மற்றும் பிற வானிலை மாற்றங்களால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை இதன் மூலம் சரி செய்து கொள்ளலாம்.

ஒரு கால்நடைக்கு காப்பீட்டு தொகை ரூ.10 ஆயிரம். காப்பீட்டு கட்டணம் ரூ.600. விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் கொடுத்து ஏப்.24க்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

தாலுகா அளவில் வெப்ப நிலையை பொறுத்து ஏதேனும் மாற்றம் இருப்பின் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இத் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் ஆர்வம் இல்லை. காப்பீட்டு திட்ட அலுவலர்கள் கூறியதாவது:

கால்நடை வளர்ப்பவர்களுக்கு பயன் உள்ள திட்டமாக அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் ஒருவர் கூட பதிவு செய்யவில்லை.

பனைக்குளம், முதுகுளத்துார் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் 60 பேர் மட்டும் பதிவு செய்துள்ளனர் என்றனர்.






      Dinamalar
      Follow us