/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய், ஊருணியில் மண் அள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
/
கண்மாய், ஊருணியில் மண் அள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
கண்மாய், ஊருணியில் மண் அள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
கண்மாய், ஊருணியில் மண் அள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 22, 2025 03:39 AM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை,ஊரக வளர்ச்சி,பஞ்சாயத்து ராஜ் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள், ஊருணிகளில்விவசாயப் பணி மற்றும் மண்பாண்ட பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
விவசாய பயன்பாட்டிற்கு நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றிற்கு 75 க.மீ.,க்கு மிகாமலும், புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றிற்கு 90 க.மீ.,க்கு மிகாமலும் வண்டல் மண் எடுக்க இரு ஆண்டிற்கு ஒரு முறை அனுமதி வழங்கவும், மண்பாண்ட தொழில் செய்பவர்களுக்கு 60 க.மீ.,க்கு மிகாமல் களிமண் எடுத்துக் கொள்ள தாசில்தார் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் பராமரிப்பில் உள்ள (நீர்நிலைகள்) கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் விவசாயப் பணி, மண்பாண்ட தொழிலுக்கு தேவையான வண்டல், களிமண் எடுப்பதற்கு தகுதியான 1305 கண்மாய், ஊருணிகளுக்கான விபர பட்டியல் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர்களிடமிருந்து பெறப்பட்டு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, விவசாயிகள், மண்பாண்டதொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான வண்டல், களிமண் எடுக்க தங்கள் தாலுகாவிற்கு உட்பட்ட கண்மாய், ஊருணிகளுக்கான விபரங்களுடன் இசேவை மையத்தில் www.tnesevai.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.