/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் மர அறுவை ஆலையில் தீ விபத்து
/
ராமநாதபுரம் மர அறுவை ஆலையில் தீ விபத்து
ADDED : ஏப் 02, 2025 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே மர அறுவை ஆலையில்தீப்பற்றிய நிலையில் தீயணைப்பு வீரர்கள்தீயை அணைத்தனர்.
ராமநாதபுரம் தினகர்ராஜா பள்ளிக்கு பின்புறம் ரவிச்சந்திரன் 45, என்பவர் மீனாட்சி மர அறுவை மில் நடத்தி வருகிறார்.
இவரது மில்லில் அதிளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மரங்களில் தீப்பற்றியது. இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தெரிவித்தனர்.
ராமநாதபுரம் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் சாமிராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் பல ஆயிரம் மதிப்புள்ள மரங்கள் எரிந்து சாம்பலாகின. ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.