ADDED : மே 13, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடி வி.வி.ஆர்.நகரில் பால் கடை வைத்து நடத்தி வருபவர் பொன் வேல்ராஜா. இவரது கடையில் நேற்று காலை 6:30 மணிக்கு எதிர்பாராமல் மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் கடையில் இருந்த பிரிட்ஜ், பால் பொருள்கள் உள்ளிட்ட கடையில் இருந்த தளவாடப் பொருள்கள் எரிந்து சேதம் அடைந்தது.
சாயல்குடி தீயணைப்பு, மீட்பு பணி நிலைய அலுவலர் நாகநாதன் தலைமையில் மீட்பு படை வீரர்கள் போராடி மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.