sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மீன் கண்காட்சியகம் 79-வது ஆண்டு விழா

/

 மீன் கண்காட்சியகம் 79-வது ஆண்டு விழா

 மீன் கண்காட்சியகம் 79-வது ஆண்டு விழா

 மீன் கண்காட்சியகம் 79-வது ஆண்டு விழா


ADDED : பிப் 04, 2026 05:32 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் மத்திய மீன் ஆராய்ச்சி நிலையத்தில் 79வது ஆண்டு விழாவையொட்டி மீன் கண்காட்சியகத்தை ஏராளமான மாணவர்கள் கண்டு ரசித்தனர்.

நேற்று மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் 79வது ஆண்டு விழாவையொட்டி 'திறந்த வெளி இல்ல நிகழ்வு' நடந்தது. மண்டபம் கேந்திர வித்யாலயா பொறுப்பு முதல்வர் முருகன், மண்டபம் மரைக்காயர்பட்டிணம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், மண்டபம் மீன் ஆராய்ச்சி நிலைய முதன்மை விஞ்ஞானி டாக்டர் வினோத் முன்னிலையில் துவங்கியது. இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள மீன் குஞ்சுகள் பொரிப்பகம், மீன் அருங்காட்சியகத்தை ராமநாதபுரம், சிவகங்கையை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கண்டு ரசித்து பயனடைந்தனர். மேலும் கடல் சூழல் அமைப்பு, கடல் வளங்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு நிலையான பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவர்கள், விஞ்ஞானிகள் கலந்துரையாடல் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us